திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, படுக்கை வசதி, 100 பேருக்கு தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற ஒத்திகைகள் நடைபெறும். இவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஒத்திகை இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, படுக்கை வசதி, 100 பேருக்கு தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற ஒத்திகைகள் நடைபெறும். இவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஒத்திகை இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.