கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பின் பலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பின் பலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உட்பட மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.
இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பின்புலமாக செயல்படும் முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பொள்ளாச்சியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பாலியல் வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி வரும் 10ம் தேதி பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு திமுக எம்.பி கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உட்பட மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.
இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பின்புலமாக செயல்படும் முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பொள்ளாச்சியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பாலியல் வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி வரும் 10ம் தேதி பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு திமுக எம்.பி கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.