கோவை: கணவர்களுடன் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய பெண்கள் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கணவர்களுடன் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய பெண்கள் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஜோதிபுரம் செல்வ விநாயகர் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரூபனா (வயது 26) துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் ரூபினா கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு.வி.க நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார்.
நேற்று ரூபனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அரிசியை குக்கரில் போட்டுவிட்டு அதில் விசிலை மாட்ட மறந்துவிட்டார். இதனால் குக்கரிலிருந்து சாப்பாடு வெளியே தெறித்து விழுந்தது. இதைக்கண்ட அவரது தாயார் கோபமடைந்த `உனக்கு உணவு சமைக்கக்கூடத் தெரியாதா?' என ரூபினாவைக் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 16 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.
இதுபோல கோவை இடையர்பாளையம் நீலியம்மன் நகரைச் சேர்ந்தவர் ரகு. கூலித்தொழிலாளியான இவரது மனைவி காயத்ரி (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.