ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்துவதைக் கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்: கார்த்திக் எம்.எல்.ஏ தகவல்!

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நாளை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நாளை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 60 கோடி ரூபாய் செலவில் உக்கடம் பெரியகுளம், 40 கோடியில் வாலாங்குளம், 30 கோடியில் செல்வ சிந்தாமணி குளம், 12.45 கோடியில் சிங்காநல்லூர் குளம் போன்றவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. அதில் உக்கடம், பெரியகுளம் வடக்குப் பகுதியில் 25 அடி தூரம் மண்ணைப் போட்டு மூடி பணிகள் நடந்துள்ளன. குளக்கரையை மேம்படுத்தும்போது குளங்களின் அளவைக் குறைக்கக்கூடாது என்று கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவை மீறி குளக்கரை பகுதி மூடப்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் சாக்கடை நீர் முழு அளவில் தேங்கியுள்ளது. அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. துர்நாற்றம் வீசும் இடத்தில் மக்கள் எப்படி செல்ல முடியும்? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வணிக கடைகள் அமைக்கும் முயற்சியைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...