கோவையில் தாயிடம் கோபித்துக்கொண்டு 5-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை: போத்தனூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.


கோவை: போத்தனூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த சிறுமி, தனது தாயிடம் சாப்பிட பொரி வாங்கி தருமாறு கூறி உள்ளார், பிறகு வாங்கி தருகிறேன் என தனது தாய் கூறி அவரை கோபமாக திட்டியதால், கோபித்துக் கொண்டு அந்த சிறுமி அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, சிறுமியை அழைப்பதற்காக அவரது தாயார் சரஸ்வதி அங்கு சென்றார். ஆனால், ஒரு அறைக்குள் உள் பக்கமாக தாழிட்டு கொண்ட சிறுமி கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவள், தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்த சரஸ்வதி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று கதவைத் திறந்த போது, கதவின் கைப்பிடியில் சிறுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின், தகவலறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், 174 சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...