கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் காரணமாக நெடுஞ்சாலைக்குச் சொந்தமான வெள்ளமலை பகுதியிலிருந்து வால்பாறை டவுன் பகுதி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை நடுமலை, பச்சை மலை, கருமலை வழியாக 40-வது கொண்டை ஊசி வளைவு வழியாக பொள்ளாச்சி சாலையை இணைக்கும் பகுதியாகும். தார்ச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் காரணமாக நெடுஞ்சாலைக்குச் சொந்தமான வெள்ளமலை பகுதியிலிருந்து வால்பாறை டவுன் பகுதி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை நடுமலை, பச்சை மலை, கருமலை வழியாக 40-வது கொண்டை ஊசி வளைவு வழியாக பொள்ளாச்சி சாலையை இணைக்கும் பகுதியாகும். தார்ச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.