நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி: பகுதி மக்கள் மகிழ்ச்சி!

கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.


கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.



இதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் காரணமாக நெடுஞ்சாலைக்குச் சொந்தமான வெள்ளமலை பகுதியிலிருந்து வால்பாறை டவுன் பகுதி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை நடுமலை, பச்சை மலை, கருமலை வழியாக 40-வது கொண்டை ஊசி வளைவு வழியாக பொள்ளாச்சி சாலையை இணைக்கும் பகுதியாகும். தார்ச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...