கோவை: கோவை உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை இடித்து அகற்றும் பணி முடிவடைந்தது.
கோவை: கோவை உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை இடித்து அகற்றும் பணி முடிவடைந்தது.
கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குளக்கரைகளில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட பிளேங் ஜோன், சிற்றுண்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, குளக்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாலாங்குளத்தை ஒட்டியுள் மஜித் காலனி பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கிருந்த 2 அம்மன் கோயில்கள், மதுரை வீரன் கோயில், விநாயகர் கோயில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் போன்றவைகளை கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் இடிக்கும் பணி துவங்கியது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் வாலாங்குளத்தினை காண வரும் மக்கள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, அங்கு 200 இருசக்கரக வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், வாகன நிறுத்தம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது," என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குளக்கரைகளில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட பிளேங் ஜோன், சிற்றுண்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, குளக்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாலாங்குளத்தை ஒட்டியுள் மஜித் காலனி பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கிருந்த 2 அம்மன் கோயில்கள், மதுரை வீரன் கோயில், விநாயகர் கோயில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் போன்றவைகளை கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் இடிக்கும் பணி துவங்கியது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் வாலாங்குளத்தினை காண வரும் மக்கள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, அங்கு 200 இருசக்கரக வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், வாகன நிறுத்தம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது," என்று தெரிவித்தார்.