கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விஷம் குடித்த பெண் ஒருவரும், உணவு சமைத்தபோது தீயில் கருகிய ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விஷம் குடித்த பெண் ஒருவரும், உணவு சமைத்தபோது தீயில் கருகிய ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை தொண்டாமுத்தூர், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர்ஐ.டி படித்து முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையுடன் இருந்து வந்த விஷ்ணு நேற்று தனது தாத்தா வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.
கெம்பனூர் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியஅவர் சிறிது தூரம் கழித்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதும் விஷ்ணு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
கோவை தொண்டாமுத்தூர், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர்ஐ.டி படித்து முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையுடன் இருந்து வந்த விஷ்ணு நேற்று தனது தாத்தா வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.
கெம்பனூர் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியஅவர் சிறிது தூரம் கழித்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதும் விஷ்ணு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.