சோதனைச்சாவடியில் சிக்கிய கணக்கில் வராத பணம்: வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை!

கோவை: கோவை - கேரளா எல்லையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கணக்கில் வராத 51 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர், ஓய்வுபெற்ற வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஒரு பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை - கேரளா எல்லையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கணக்கில் வராத 51 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர், ஓய்வுபெற்ற வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஒரு பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் இருந்து கோவை வரும் வழியில் உள்ள முதல் சோதனைச்சாவடியில் இன்று மாலை 6.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கணேஷ் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத மற்றும் ரசீது போடப்படாத 51 ஆயிரத்து 80 ரூபாய் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், உதவியாளர் சீனிவாசன், இளநிலை உதவியாளர் பத்மா, ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரைப் பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த சோதனைச் சாவடியில் தொடர்ந்து வாகனங்களிடம் லஞ்சம் பெறுவதாக போலீசாருக்கு தொலைபேசி மூலமாக ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டதாக டி.எஸ்.பி கூறினார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து சோதனைச் சாவடிகளை குறிவைத்து சோதனை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...