கோவை: பனிப்பொழிவால் பொள்ளாச்சியில் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை: பனிப்பொழிவால் பொள்ளாச்சியில் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நெல் மற்றும் மானாவாரி சாகுபடிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக ஜமீன் ஊத்துக்குளி, ராசக்காபாளையம், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக வெண்டை செடிகளில் பூக்கள் கருகி வருவதோடு, வெண்டைக்காய்களும் முளையிலேயே கருகி வருகிறது. இதனால் தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விளைச்சல் குறைவாக உள்ளதால் வெண்டைக்காய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நெல் மற்றும் மானாவாரி சாகுபடிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக ஜமீன் ஊத்துக்குளி, ராசக்காபாளையம், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக வெண்டை செடிகளில் பூக்கள் கருகி வருவதோடு, வெண்டைக்காய்களும் முளையிலேயே கருகி வருகிறது. இதனால் தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விளைச்சல் குறைவாக உள்ளதால் வெண்டைக்காய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.