சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கை உடைப்பு: பொதுமக்கள் ஆத்திரம்!

கோவை: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பொதுமக்கள் உடைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பொதுமக்கள் உடைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை நீலம்பூர் அருகே உள்ள குளத்துக்கரையைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவருக்கு பெற்றோர் இல்லாததால் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற குஞ்சான் வயது (வயது 26) என்பவருடன் அந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. கூலி வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகவில்லை. சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது சதீஷ்குமார் அங்கு சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. மேலும் நடக்கும் சம்பவங்களை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தாராம். நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற சதீஷ்குமார் மீண்டும் அந்தச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் அவரது இடதுகையை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தச்சிறுமி சதீஷ்குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷ்குமாரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த சதீஷ்குமாரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...