Tamilnadu government recently announced the pongal gift of 2500 rupees along with other basic supplies.
திருப்பூர்: 40 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் பணத்தை, விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்தனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பொங்கல் பரிசுத் தொகையாக அரசு வழங்கிய 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.

அப்போது, விவசாயிகளை காவல்துறையினர் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து, தங்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் விவசாயிகள் 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடமே திருப்பி அளித்து விரைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பொங்கல் பரிசுத் தொகையாக அரசு வழங்கிய 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.
அப்போது, விவசாயிகளை காவல்துறையினர் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து, தங்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் விவசாயிகள் 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடமே திருப்பி அளித்து விரைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.