ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் என்னாச்சு..? பொங்கல் பரிசு தொகை ரூ 2500 யை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி கொடுத்த விவசாயிகள்..!

Tamilnadu government recently announced the pongal gift of 2500 rupees along with other basic supplies.


திருப்பூர்: 40 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் பணத்தை, விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்தனர்.



திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பொங்கல் பரிசுத் தொகையாக அரசு வழங்கிய 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.



அப்போது, விவசாயிகளை காவல்துறையினர் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து, தங்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் விவசாயிகள் 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடமே திருப்பி அளித்து விரைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...