வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சிந்தமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி விற்பனை நிலையத்தில் இன்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சிந்தமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி விற்பனை நிலையத்தில் இன்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள 48 நியாய விலை கடைகள் மூலம் 17314 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதார்களுக்கும், தலா 2500 ரூபாயுடன் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், ஒரு நீள முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் வழங்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி. அமீது, வருவாய்த்துறையினர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறையில் உள்ள 48 நியாய விலை கடைகள் மூலம் 17314 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதார்களுக்கும், தலா 2500 ரூபாயுடன் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், ஒரு நீள முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் வழங்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி. அமீது, வருவாய்த்துறையினர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.