கோவை: கோவையில் இன்று அதி காலையிலிருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சக்கூடிய அளவில் கிளைமேட் காணப்படுகிறது.
கோவை: கோவையில் இன்று அதி காலையிலிருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சக்கூடிய அளவில் கிளைமேட் காணப்படுகிறது.
கோவையில் இன்று காலை பனிப்பொழிவுக்கு மத்தியில் மேகமூட்டம் காணப்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாகக் காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் நடைப்பயிற்சி செய்யக் கூடியவர்கள், ஸ்வெட்டர், குல்லா, அணிந்து சென்றனர். ஒரு சிலர் பனிப்பொழிவுக்காக குடைபிடித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இன்று திங்கள்கிழமை என்பதால் தனியார் நிறுவனம், அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், அரசு அலுவலர்கள், சாரல் மழை காரணமாக கடும் அவதிக்கு ஆளானார்கள். வானிலை மையம் சார்பாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. மழை வரும் என்று எதிர்பார்க்காத மக்கள் சாரல் மழையில் நனைந்தபடி தங்களது அலுவலகங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சும் வகையிலான கிளைமேட் தொடர்கிறது.
கோவையில் இன்று காலை பனிப்பொழிவுக்கு மத்தியில் மேகமூட்டம் காணப்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாகக் காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் நடைப்பயிற்சி செய்யக் கூடியவர்கள், ஸ்வெட்டர், குல்லா, அணிந்து சென்றனர். ஒரு சிலர் பனிப்பொழிவுக்காக குடைபிடித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இன்று திங்கள்கிழமை என்பதால் தனியார் நிறுவனம், அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், அரசு அலுவலர்கள், சாரல் மழை காரணமாக கடும் அவதிக்கு ஆளானார்கள். வானிலை மையம் சார்பாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. மழை வரும் என்று எதிர்பார்க்காத மக்கள் சாரல் மழையில் நனைந்தபடி தங்களது அலுவலகங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சும் வகையிலான கிளைமேட் தொடர்கிறது.