கோவை: வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் மில் தொழிலாளி பிணமாகக் கிடந்தார்.
கோவை: வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் மில் தொழிலாளி பிணமாகக் கிடந்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பால் மார்க்கெட்டை அடுத்த என்.டி.சி பிரிவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 34). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகம் அந்தப் பகுதியில் உள்ள என்.டி.சி.மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் மனைவியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 29-ம்தேதி மில் திறக்கப்பட உள்ளது என்பதை அறிந்ததும் சண்முகம் மட்டும் கோவை வந்தார்.
புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சண்முகம் அதன் பின்னர் வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினர். அப்போது கதவு தானாக திறந்து கொண்டது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த ஆர்.எஸ் புரம் சப்-இன்ஸ்பெக்டர் மெய்யப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பால் மார்க்கெட்டை அடுத்த என்.டி.சி பிரிவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 34). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகம் அந்தப் பகுதியில் உள்ள என்.டி.சி.மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் மனைவியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 29-ம்தேதி மில் திறக்கப்பட உள்ளது என்பதை அறிந்ததும் சண்முகம் மட்டும் கோவை வந்தார்.
புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சண்முகம் அதன் பின்னர் வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினர். அப்போது கதவு தானாக திறந்து கொண்டது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த ஆர்.எஸ் புரம் சப்-இன்ஸ்பெக்டர் மெய்யப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.