வனத்துறை தூய்மைப்பணியின்போது காயங்களுடன் சிக்கிய உடும்பு!

கோவை: வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பகத்தில் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயங்களுடன் உடும்பு ஒன்று சிக்கியது.


கோவை: வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பகத்தில் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயங்களுடன் உடும்பு ஒன்று சிக்கியது.

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட மாங்கரை வனதணிக்கை நிலையம் முதல் ஆனைகட்டி ஆசிரமம் வரையுள்ள சாலையின் இருபுறமும் கண்ணாடிபாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று காலை தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர் இணைந்துதூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்.

தூய்மைப்பணியின்போது சுமார் ஒன்றரை டன் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை சேகரித்து மாங்கரை வனத்தணிக்கை நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த குப்பைகளை வீரபாண்டி பஞ்சாயத்திடம்ஒப்படைக்கப்படும். வனத்துறையினரின் இந்த தூய்மைப் பணியின்போது சலீம் அலி பகுதியில் சாலையோரத்தில் அடிபட்டு காயங்களுடன் உடும்பு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்து வனவரிடம் ஒப்படைத்தனர்.

இந்தப் பணியின்போது தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர்அருண் குமார், செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் சரவணக்குமார்

மற்றும் உறுப்பினர்கள், இயற்கை விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவி ஷோபனா மற்றும் அவர்களது அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...