கோவை: மன அழுத்தம் காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: மன அழுத்தம் காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். துணிக்கடை ஊழியரான இவரது மனைவி பத்மாவதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பத்மாவதி கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று காயம் குணமடைந்த பத்மாவதி கர்நாடகாவில் உள்ள அவரது சித்தப்பா வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் ஆறுதல் கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி னார். வெளியே சென்று திரும்பிய குடும்பத்தினர் பத்மாவதி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருதுவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக பத்மாவதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினர்.
கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். துணிக்கடை ஊழியரான இவரது மனைவி பத்மாவதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பத்மாவதி கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று காயம் குணமடைந்த பத்மாவதி கர்நாடகாவில் உள்ள அவரது சித்தப்பா வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் ஆறுதல் கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி னார். வெளியே சென்று திரும்பிய குடும்பத்தினர் பத்மாவதி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருதுவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக பத்மாவதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினர்.