புத்தாண்டை வரவேற்ற என்ஜினீயர் மாடிப்படியில் தடுமாறி விழுந்து சாவு: போதையால் பரிதாபம்!

கோவை: புத்தாண்டை வரவேற்ற என்ஜினீயர் மாடிப்படியில் தடுமாறி விழுந்து இறந்தார். மது போதையால் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கோவை: புத்தாண்டை வரவேற்ற என்ஜினீயர் மாடிப்படியில் தடுமாறி விழுந்து இறந்தார். மது போதையால் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தினேஷ் குமார் (வயது 26), பி.இ பட்டதாரியான இவர் கோவை ராமநாதபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள ஒரு கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவர் தனது நண்பர்களுடன் தான் வேலை செய்யும் கம்பெனியில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார். நண்பர் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறினார். அதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் செல்போன் மூலமாக வாழ்த்துக்களை மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

சிறிது நேரத்தில் ஆரவாரம் அடங்கியதும். தனது நண்பர்களுடன் மாடியிலிருந்து இறங்கினார். அப்போது கால் தடுமாறி விழுந்தார். விழுந்த வேகத்தில் படியிலிருந்து `கடகட'வென உருண்டு கீழே விழுந்த தினேஷ்குமாரின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் கம்பெனி ஊழியர்கள் தினேஷ்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் தினேஷ்குமார் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கூறினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...