கோவை: கோவை ஆர்.எஸ் புரம் அருகே உள்ள சாஸ்திரி மைதானம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை: கோவை ஆர்.எஸ் புரம் அருகே உள்ள சாஸ்திரி மைதானம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெய்யப்பன் தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்த கெம்பட்டி காலனியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, ரூபாய் 45 ஆயிரத்து 700 பணம், 2 செல்போன், ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இரண்டு பேரையும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.