கொரோனா பரவாமலிருக்க வேப்ப மரம் - அரச மரத்துக்கு திருமணம்!

கோவை: துடியலூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா பரவாமலிருக்க வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து விநோத வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கோவை: துடியலூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா பரவாமலிருக்க வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து விநோத வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன் பாளையத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு தல விருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது.

இந்நிலையில் நோய் பரவாமல் இருக்கவும் உலக நன்மை வேண்டியும் கருப்பராயன் கோவிலில் உள்ள வேப்ப மரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் பாவித்து திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசமரத்துக்கு பட்டு வேட்டி துண்டும், வேப்பமரத்துக்கு பட்டுப் புடவையும் சாற்றி மாலை அணிவித்தனர். புரோகிதர்கள் யாக குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தி வைத்தனர். பெண்கள் தங்கத் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து வேம்பு மற்றும் அரச மரத்தைச் சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறுகள் வழங்கப்பட்டன.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...