கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிப்பணம் கையாடல் செய்யப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிப்பணம் கையாடல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோவை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கையாடல் குறித்து விசாரிக்க மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவரிடம் குற்றவாளி குறித்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வரிவசூல் ஊழியராக பணிபுரிந்தவர் யுவராஜ். இவர் பொதுமக்களிடம் வரியாக வசூலித்த ரூபாய் 20 லட்சத்தை கருவூலத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெண் அதிகாரி ஒருவரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளி யுவராஜ்மீது போலீசில் புகார் அளிக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வரிவசூல் ஊழியராக பணிபுரிந்தவர் யுவராஜ். இவர் பொதுமக்களிடம் வரியாக வசூலித்த ரூபாய் 20 லட்சத்தை கருவூலத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெண் அதிகாரி ஒருவரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளி யுவராஜ்மீது போலீசில் புகார் அளிக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.