கோவை: கோவை வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
கோவை: கோவை வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சி சின்னங்கள், கட்டுப்பாட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, பெல் நிறுவன என்ஜினீயர்கள் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் வரை நடைபெறும். ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க திட்டமிட்டுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கூடுதல் வாக்குச்சாவடிகள் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சி சின்னங்கள், கட்டுப்பாட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, பெல் நிறுவன என்ஜினீயர்கள் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் வரை நடைபெறும். ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க திட்டமிட்டுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கூடுதல் வாக்குச்சாவடிகள் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.