கோவை: வால்பாறையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் கார்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் கார்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த அப்பர்பாரளை எஸ்டேட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென வந்த 13 காட்டுயானைகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் அங்குள்ள சத்துணவுக்கூடத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையைத் தின்றதுடன் தூக்கி வீசி நாசப்படுத்தின. பள்ளிக்கூடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வேன் போன்றவை சேதமடைந்தன. கார்களின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன.
சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோது குடியிருப்புக்கு அருகே காட்டு யானைகள் கார்களை சேதப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால், காட்டுயானைகள் குடியிருப்புகளில் உள்ள வனப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்தன. இதனால் அப்பகுதியில் அச்சமும், பீதியும் நிலவுகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு இப்பகுதியில் அகழிகள், மின் வேலிகள் அமைத்துத் தரும்படி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் யானை எங்கே நிற்கிறது, எப்படி வருகிறது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். ஆகவே உடனடியாக இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த அப்பர்பாரளை எஸ்டேட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென வந்த 13 காட்டுயானைகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் அங்குள்ள சத்துணவுக்கூடத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையைத் தின்றதுடன் தூக்கி வீசி நாசப்படுத்தின. பள்ளிக்கூடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வேன் போன்றவை சேதமடைந்தன. கார்களின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன.
சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோது குடியிருப்புக்கு அருகே காட்டு யானைகள் கார்களை சேதப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால், காட்டுயானைகள் குடியிருப்புகளில் உள்ள வனப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்தன. இதனால் அப்பகுதியில் அச்சமும், பீதியும் நிலவுகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு இப்பகுதியில் அகழிகள், மின் வேலிகள் அமைத்துத் தரும்படி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் யானை எங்கே நிற்கிறது, எப்படி வருகிறது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். ஆகவே உடனடியாக இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.