பொள்ளாச்சி பகுதியில் மூடுபனி: முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன!

கோவை: பொள்ளாச்சி பகுதியில் மூடுபனி நிலவியதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் மூடுபனி நிலவியதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.



தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக உள்ளது. இப்பகுதியில், கடந்த சில வருடங்களாக பருவமழை சரிவர பெய்யாமல் இருந்து வந்தது. மேலும் கடந்த சில வருடங்களாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இருந்துவந்த மூடுபனிஇல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து, நகர் மற்றும் வனப்பகுதி பசுமையாக உள்ளது. மேலும் பொள்ளாச்சி, ஆழியாறு ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.



காலை 8 மணி வரை பனிமூட்டம் இருப்பதால், பொள்ளாச்சி - கோவை சாலை, பொள்ளாச்சிநடுப்புணி சாலை, பொள்ளாச்சி - வால்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகள் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கிச் சென்றனர். இருப்பினும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...