தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம்: எம்.எல்.ஏ உள்பட 300 பேர் கைது!

கோவை: தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 4 நாட்களாக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்து வருகிறது.



கோவை மாநகர காவல்துறையினர் தடையை மீறி நடைபெற்று வரும் இந்தக் கூட்டம் நேற்று மாலை பழையூர் 60-வது வார்டு ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

தடையை மீறியதாக கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க.வினர் 300 பேரை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வே.நா. உதயகுமார், செல்வராஜ், ஆனந்தன், கண்ணன், உமாமகேஸ்வரி, கல்பனா, அன்னம்மாள், பொதுக்குழு உறுப்பினர் முருகன், ராஜராஜேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் நாகராஜ், சேக் அப்துல்லா, பசுபதி வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம், எத்திராஜ், மேகநாதன், குட்டி என்ற ராஜா முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனி 73 - வது வார்டு பகுதியில் தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதி பொறுப்பாளர் பதுருதீன், வார்டு செயலாளர் தண்டபாணி கோவை சுஜித் உள்பட 73 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...