விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் கைது!

கோவை: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.


கோவை: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

சூலூர் அருகே உள்ள அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். சண்முகம் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், 2020 மின் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசு அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்காக சென்னை நோக்கி பேரணி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்காக அவர் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராமசாமிக்கு கவுண்டர், மாரப்ப கவுண்டர் கவுண்டர், ஆயிக் கவுண்டர் ஆகியோரது நினைவிடம் உள்ள திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து பேரணியாக புறப்பட திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகத்தை அவரது வீட்டில் வைத்து சூலூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகம் போலீஸ் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். கைது நடவடிக்கை எடுத்தாலும் சென்னை நோக்கி திட்டமிட்டபடி பெருமாநல்லூரில் இருந்து பேரணி தொடங்கும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் விவசாய சங்கத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...