கோவை: கோவையில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அன்னூர் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முருகம்மாள் (வயது97). இத்தம்பதியரின் மகன் ரங்கசாமி. இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற வேண்டும் எனக்கூறி வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். மேலும் அப்போது 25 சென்ட் இடத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கூறிய ரங்கசாமி மொத்தமுள்ள 13 ஏக்கர் நிலத்தையும் தன் பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரங்கசாமி இறந்துவிட்டதால் வாழ்வாதாரமின்றி தவித்த முருகம்மாள் சொத்துப் பத்திரத்தை மருமகள் பாப்பாத்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் மருமகள் தர மறுத்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகம்மாள் பாட்டி தனது தங்கைகளான மாராத்தாள், லட்சுமி, பாப்பாத்தி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவர்கள் நான்கு பேரும் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் என்பதால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டிகளின் இந்தச் செயலை கண்டனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று மூதாட்டிகள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அன்னூர் தாசில்தார் சந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மூதாட்டிகள் நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கோவை அன்னூர் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முருகம்மாள் (வயது97). இத்தம்பதியரின் மகன் ரங்கசாமி. இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற வேண்டும் எனக்கூறி வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். மேலும் அப்போது 25 சென்ட் இடத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கூறிய ரங்கசாமி மொத்தமுள்ள 13 ஏக்கர் நிலத்தையும் தன் பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரங்கசாமி இறந்துவிட்டதால் வாழ்வாதாரமின்றி தவித்த முருகம்மாள் சொத்துப் பத்திரத்தை மருமகள் பாப்பாத்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் மருமகள் தர மறுத்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகம்மாள் பாட்டி தனது தங்கைகளான மாராத்தாள், லட்சுமி, பாப்பாத்தி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவர்கள் நான்கு பேரும் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் என்பதால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டிகளின் இந்தச் செயலை கண்டனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று மூதாட்டிகள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அன்னூர் தாசில்தார் சந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மூதாட்டிகள் நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.