தி.மு.க.வினர் நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் புகுந்த அ.தி.மு.க.வினர் கோஷம்; பரபரப்பு!

கோவை: தி.மு க.வினர் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து கோஷமிட்டதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.


கோவை: தி.மு க.வினர் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து கோஷமிட்டதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்கும்விதமாக பல்வேறு காரணங்களைக் கூறி கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் 6 -வது வட்டம் டி.டி.எஸ் நகர் பகுதியில் 6-வது வட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் தடையை மீறி இன்று காலை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

'அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டு அதில் பலர் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

தடையை மீறி நடைபெற்ற காரணத்தால் தி.மு.க.வினரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து 'அ.தி.மு.க.வை நிராகரிக்க நீங்கள் யார்?' என கேள்விகளைக் கேட்டனர். இதனால் வாக்குவாத ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உடனடியாக ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டனர். அதற்குள் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் இருதரப்பினரையும் தடுத்ததுடன் தி.மு.க.வினரை மட்டும் வேனில் ஏற்றி கைது செய்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து சூழல் கட்டுக்குள் வந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் குழுமியிருந்த அ.தி.மு.க.வினர் கூறுகையில், தற்போது கவுண்டம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தி.மு க. நிர்வாகிகள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் அவர்கள் டி.வி.எஸ். நகர் பகுதியில் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். காவல்துறையினர் கைது செய்ததும் உடனடியாக அவர்களை விடுவித்தன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் 6-வது வட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன், 6-வது வட்ட துணைச் செயலாளர் கரு பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரம், தியாகராஜன், பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மதியழகன் மருத்துவரணி, கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சதீஷ் குமார், ஆனந்தபாபு, தேவேந்திரன், ரவிமுரசு, தம்பான், ஜகன் மோகன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...