ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையான வெள்ளிக்கிழமை மற்றும் சனி,ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையான வெள்ளிக்கிழமை மற்றும் சனி,ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளிர்ச்சியான காலநிலை காணப்படுகிறது. இந்த தட்பவெப்பநிலையை அனுபவிப்பதற்காகவே தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்விதமாக இங்கு இதமான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது, தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு நிகழ்கிறது, பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்று வீசுகிறது, இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.

தாவரவியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை 6,813 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 9,849 சுற்றுலாப் பயணிகளும் வந்தனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகை இருமடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை 3,535 பேர், ஞாயிற்றுக்கிழமை 6184 பேர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த வாரம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளிர்ச்சியான காலநிலை காணப்படுகிறது. இந்த தட்பவெப்பநிலையை அனுபவிப்பதற்காகவே தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்விதமாக இங்கு இதமான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது, தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு நிகழ்கிறது, பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்று வீசுகிறது, இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.

தாவரவியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை 6,813 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 9,849 சுற்றுலாப் பயணிகளும் வந்தனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகை இருமடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை 3,535 பேர், ஞாயிற்றுக்கிழமை 6184 பேர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த வாரம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.