கோவை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதல் அருணாச்சலம் அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அருணாச்சலம் அவர்கள் கட்சியின் கோட்பாடுகள் வழிகாட்டுதல்களுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான காரணத்தினாலும் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே, கட்சியினர் அனைவரும் அவருடன் கட்சி சம்மந்தப்பட்ட எந்த விதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதல் அருணாச்சலம் அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அருணாச்சலம் அவர்கள் கட்சியின் கோட்பாடுகள் வழிகாட்டுதல்களுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான காரணத்தினாலும் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே, கட்சியினர் அனைவரும் அவருடன் கட்சி சம்மந்தப்பட்ட எந்த விதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.