வண்ண விளக்குகளால் ஜொலித்த கோவை தேவாலயங்கள்; கொரோனா விதிமுறையை பின்பற்றி சிறப்பு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

கோவை: கோவை புனித மைக்கல் தேவாலயத்தில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பெண்கள் குழந்தைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை: கோவை புனித மைக்கல் தேவாலயத்தில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பெண்கள் குழந்தைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மைக்கல் தேவாலயமும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. 

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது புனித மைக்கேல் தேவாலயத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்பர், ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேவாலயங்களில் நடைபெற்று வரும் கிருஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகளில் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 



நேற்று இரவு, மைக்கேல் தேவாலயத்தில் 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை தொடங்கியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை பாடல்களை பாடி, இறைவனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் குழந்தை இயேசு பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து, குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஊழியர்களுடன் ஆலயத்தை சுற்றி வந்து குழந்தை இயேசுவின் வரலாறு மற்றும் நற்செய்தி அறிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், கொரோனா வைரஸ் முற்றிலுமாக உலகைவிட்டு அகலவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...