கோவை: ஐஐடியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற அறிக்கையை நிராகரிக்கக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஐஐடியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற அறிக்கையை நிராகரிக்கக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
அப்போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழு அமைக்கப்பட்டதாகவும் அக்குழு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டுமெனவும் பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
அப்போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழு அமைக்கப்பட்டதாகவும் அக்குழு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டுமெனவும் பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.