திருப்பூர்: காமராஜரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கைது செய்யக் கோரி பனங்காட்டுப் படை கட்சியினர் திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
திருப்பூர்: காமராஜரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கைது செய்யக் கோரி பனங்காட்டுப் படை கட்சியினர் திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களை வாழும் காமராஜர் என அரசியல் லாப நோக்கத்திற்காக தவறான முறையில் விளம்பரம் செய்வதாகவும், இந்த செயல் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பனங்காட்டுப்படை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தவறாகப் பயன்படுத்திய மக்கள் நீதி மையம் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.