பூ மார்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 95 பூக்கடைகள் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை பூ மார்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை பூ மார்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

கோவையின் முக்கிய இடமான பூமார்க்கெட் பகுதியில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் பூமார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கர் பள்ளி மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணியானது, கடந்த மே மாதம் துவங்கியது. இந்த பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய கடைகள் ஏலம் மூலம் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய பூமார்க்கெட்டில் 100 கடைகள் அமைக்க மட்டுமே இட வசதி உள்ளது. ஆனால், அங்கு 140 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. எனவே, பழைய பூமார்க்கெட் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அப்பணிகள் நிறைவுற்ற பிறகு, அங்கு ஏற்கனவே கடைகள் நடத்தி வந்த 100 வியாபாரிகளுக்கு முறையாக வழங்கப்படும். தற்போது, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் மூலமாக வியாபாரிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும். இந்த ஏலத்தில் கலந்து கொண்டு கடைகளை எடுக்கலாம். ஏலம் நடைபெறும் விவரங்கள் விரைவில் மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...