வட்டிப்பணம் ஆசை காட்டி மும்பை பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!

கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.


கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மோனிகா அபே ஜெயின் (வயது 35). இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் ட்ரீம் `மேக்கர்ஸ் குளோபல்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அவர்கள் நிதிநிறுவனம் நடத்தி வருவதாகவும் எவ்வளவு பணம் செலுத்தினாலும் அதற்கு தினமும் 1.5 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறினர். அதை நம்பி நான் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி வட்டித்தொகையை தரவில்லை. அத்துடன் முதலீட்டுத் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதன்படி சதீஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். குணவதியை தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் யார், யாரிடமெல்லாம் பணம் பெற்று மோசடி செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...