கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மோனிகா அபே ஜெயின் (வயது 35). இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் ட்ரீம் `மேக்கர்ஸ் குளோபல்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அவர்கள் நிதிநிறுவனம் நடத்தி வருவதாகவும் எவ்வளவு பணம் செலுத்தினாலும் அதற்கு தினமும் 1.5 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறினர். அதை நம்பி நான் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி வட்டித்தொகையை தரவில்லை. அத்துடன் முதலீட்டுத் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதன்படி சதீஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். குணவதியை தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் யார், யாரிடமெல்லாம் பணம் பெற்று மோசடி செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மோனிகா அபே ஜெயின் (வயது 35). இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் ட்ரீம் `மேக்கர்ஸ் குளோபல்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அவர்கள் நிதிநிறுவனம் நடத்தி வருவதாகவும் எவ்வளவு பணம் செலுத்தினாலும் அதற்கு தினமும் 1.5 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறினர். அதை நம்பி நான் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி வட்டித்தொகையை தரவில்லை. அத்துடன் முதலீட்டுத் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதன்படி சதீஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். குணவதியை தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் யார், யாரிடமெல்லாம் பணம் பெற்று மோசடி செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.