அறிவுரை வழங்கிய போலீசுக்கு சரமாரி அடி: அண்ணன் - தம்பி கைது!

கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் மாசாணி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை போலீஸ்காரர் கணபதி மெதுவாகப் போகுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து போலீஸ்காரருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரண்டு பேரும் சேர்ந்து அறிவுரை வழங்கிய போலீஸ்காரர் கணபதியை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் செய்தார். அதன்பேரில் இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஆனைமலையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சந்தோஷ்குமார், மணிகண்டன் என்பது தெரியவந்தது.

கொலை மிரட்டல் விடுத்ததுடன் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...