கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் மாசாணி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை போலீஸ்காரர் கணபதி மெதுவாகப் போகுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து போலீஸ்காரருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரண்டு பேரும் சேர்ந்து அறிவுரை வழங்கிய போலீஸ்காரர் கணபதியை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் செய்தார். அதன்பேரில் இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஆனைமலையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சந்தோஷ்குமார், மணிகண்டன் என்பது தெரியவந்தது.
கொலை மிரட்டல் விடுத்ததுடன் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் மாசாணி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை போலீஸ்காரர் கணபதி மெதுவாகப் போகுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து போலீஸ்காரருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரண்டு பேரும் சேர்ந்து அறிவுரை வழங்கிய போலீஸ்காரர் கணபதியை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் செய்தார். அதன்பேரில் இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஆனைமலையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சந்தோஷ்குமார், மணிகண்டன் என்பது தெரியவந்தது.
கொலை மிரட்டல் விடுத்ததுடன் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.