கோவை: கோவை மத்திய சிறை வாசலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் உரிய விசாரணைக்குப் பிறகு கோபிசெட்டிபாளையம் பெண் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை மத்திய சிறை வாசலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் உரிய விசாரணைக்குப் பிறகு கோபிசெட்டிபாளையம் பெண் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை வ.உ.சி பூங்கா சாலையில் மத்திய சிறையின் நுழைவு வாயில் உள்ளது. நேற்று மத்திய சிறையின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையோரத்தில் 5 துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தோட்டாக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த துப்பாக்கி தோட்டாக்கள், கைதிகளை ஆஜர்படுத்த வரும் போலீசார் பயன்படுத்தும் பாயிண்ட் 410 மஸ்கட் ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, தோட்டாக்களை விட்டுச் சென்றது யார் என ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு வந்த பெண் போலீஸ் தவற விட்டுச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார், தோட்டாக்களை தவறவிட்ட பெண் போலீசிடம் ஒப்படைத்தனர்.
கோவை வ.உ.சி பூங்கா சாலையில் மத்திய சிறையின் நுழைவு வாயில் உள்ளது. நேற்று மத்திய சிறையின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையோரத்தில் 5 துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தோட்டாக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த துப்பாக்கி தோட்டாக்கள், கைதிகளை ஆஜர்படுத்த வரும் போலீசார் பயன்படுத்தும் பாயிண்ட் 410 மஸ்கட் ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, தோட்டாக்களை விட்டுச் சென்றது யார் என ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு வந்த பெண் போலீஸ் தவற விட்டுச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார், தோட்டாக்களை தவறவிட்ட பெண் போலீசிடம் ஒப்படைத்தனர்.