கோவை: கோவை ரத்தினபுரி அருகே மின்சார வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ரத்தினபுரி அருகே மின்சார வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்ப நகரைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் ஸ்ரீதர் (17). இவர் கணபதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீதர் வடவள்ளி வி.என்.ஆர் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவர்கள் அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின்சார வயரை மரக்குச்சியால் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீதர் திடீரென என்னை எல்லாம் மின்சாரம் தாக்காது என கூறிக்கொண்டு மின்சார ஒயரைபிடித்தார்.
இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஸ்ரீதரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்ப நகரைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் ஸ்ரீதர் (17). இவர் கணபதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீதர் வடவள்ளி வி.என்.ஆர் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவர்கள் அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின்சார வயரை மரக்குச்சியால் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீதர் திடீரென என்னை எல்லாம் மின்சாரம் தாக்காது என கூறிக்கொண்டு மின்சார ஒயரைபிடித்தார்.
இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஸ்ரீதரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.