திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென்று அனைத்துக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென்று அனைத்துக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் 90 நாட்களில் கடையை அகற்றுவதாக அறிவித்திருந்தது . ஆனால் அதன்படி கடை அகற்றப்படாததைக் கண்டித்து தமிழக அரசின் வாய்மையே வெல்லும் என்ற அரசின் தார்மீக உரிமையை மீறி விட்டதா? என்ற சுவரொட்டியுடன் அப்பகுதி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் 90 நாட்களில் கடையை அகற்றுவதாக அறிவித்திருந்தது . ஆனால் அதன்படி கடை அகற்றப்படாததைக் கண்டித்து தமிழக அரசின் வாய்மையே வெல்லும் என்ற அரசின் தார்மீக உரிமையை மீறி விட்டதா? என்ற சுவரொட்டியுடன் அப்பகுதி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.