கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில், மத்திய அரசு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மானியத்தை விட்டுத் தரக்கோரி மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, சிலர் அதனை விட்டுக் கொடுத்த நிலையில், மற்றவர்களுக்கு மானிய தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை மத்திய அரசு நிறுத்தியது.



ஒரு சிலிண்டரின் விலை 600 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 100 ரூபாயை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார்.



இதன் பின்னர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மீனா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் சரஸ்வதி புஷ்பராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் வானதி நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...