கோவை: சமூக சேவை அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து கோவைப் பகுதியில் சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மற்றும் ஒரு டன் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர்.
கோவை: சமூக சேவை அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து கோவைப் பகுதியில் சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மற்றும் ஒரு டன் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

கோவை ஆனைகட்டி ரோட்டில் உள்ள தடாகம் தண்ணீர் பந்தல் முதல் மாங்கரை வரை உள்ள சாலையில் இருபுறமும் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை தமிழ்நாடு வன உயிரின அமைப்பின் தலைவர் அருண்குமார் மற்றும் இயற்கை, விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபனா மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் 'ஸ்பான்சர் ராம்ஸ் கோவை விருந்து' ராம்குமார் ஆகியோர் இணைந்து சுமார் ஒரு டன் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்றினர். பின்னர் அந்தக் குப்பைகள் அருகில் உள்ள பஞ்சாயத்து குப்பைக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அருண் குமார் கூறும்போது, 'கோவை வனத்துறையினர் அனுமதி கொடுத்தால் வனப்பகுதி சாலையோரங்களில் காணப்படும் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்ற தயாராக உள்ளோம்' என்றார்.

கோவை ஆனைகட்டி ரோட்டில் உள்ள தடாகம் தண்ணீர் பந்தல் முதல் மாங்கரை வரை உள்ள சாலையில் இருபுறமும் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை தமிழ்நாடு வன உயிரின அமைப்பின் தலைவர் அருண்குமார் மற்றும் இயற்கை, விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபனா மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் 'ஸ்பான்சர் ராம்ஸ் கோவை விருந்து' ராம்குமார் ஆகியோர் இணைந்து சுமார் ஒரு டன் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்றினர். பின்னர் அந்தக் குப்பைகள் அருகில் உள்ள பஞ்சாயத்து குப்பைக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அருண் குமார் கூறும்போது, 'கோவை வனத்துறையினர் அனுமதி கொடுத்தால் வனப்பகுதி சாலையோரங்களில் காணப்படும் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்ற தயாராக உள்ளோம்' என்றார்.