திருப்பூர்: கேஸ் விலைஉயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கேஸ் விலைஉயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் கேஸ் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழி பா.ஜ.க ஆட்சியில் `புதியன கழிதலும் பழையன புகுதலும்' என்ற புதுமொழியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர்.
கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் கேஸ் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழி பா.ஜ.க ஆட்சியில் `புதியன கழிதலும் பழையன புகுதலும்' என்ற புதுமொழியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர்.