கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுக்கரை இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மற்றும் போலீசார் மதுக்கரை பஸ் நிலையம் அருகே தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினார்.
உடனே போலீசார் விரட்டிச் சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரிடம் கஞ்சா இருந்ததுதெரியவந்தது. விசாரணையில் அவர் கணபதி நல்லா பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 24) என்பதும் மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மதுக்கரை இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மற்றும் போலீசார் மதுக்கரை பஸ் நிலையம் அருகே தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினார்.
உடனே போலீசார் விரட்டிச் சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரிடம் கஞ்சா இருந்ததுதெரியவந்தது. விசாரணையில் அவர் கணபதி நல்லா பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 24) என்பதும் மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.