கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்கள் வேலைநிறுத்தம் வாபஸ்; வரும் 21ம் தேதி முதல் இயங்கும், என அறிவிப்பு

கோவை: மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கடந்த 16ம் தேதி முதல் கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் இன்று வரை நான்கு நாட்களுக்கு ரூ.120 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

கோவை: மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கடந்த 16ம் தேதி முதல் கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் இன்று வரை நான்கு நாட்களுக்கு ரூ.120 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) முதல் தற்காலிகமாக விலக்கி கொள்வது என பவுண்டரி தொழிற்கூடங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:

பவுண்டரி மூலப்பொருட்களான பிக் அயர்ன், ஸ்கிராப், கோக் மற்றும் சார்பு பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இந்த விலை ஏற்றத்தால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். 

இதனிடையே, வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொறியியல் தொழிலுக்கு முதன்மையான பவுண்டரித்தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர் தொழில், பம்பு மற்றும் மோட்டார் தொழில், டெக்ஸ்டைல் தொழில் மற்றும் பிற பொறியியல் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பவுண்டரித் தொழிலின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்துகொண்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் விலை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இந்த கட்டுக்கடங்காத விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களுக்காக, இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிவசண்முக குமார் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...