ஒரே கதவு எண்ணில் 22 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மற்றும் கடந்த 12, 13-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மற்றும் கடந்த 12, 13-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஆவணங்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளலூர் பகுதி 5-ஆவது வார்டு அசோக் நகர் பகுதியில் 5/20 என்ற கதவு எண் உள்ள வீட்டில் 22 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஒரே கதவு எண்ணில் 22 வாக்காளர்கள் இருப்பது சாத்தியமற்றது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது தவறு ஏற்பட்டிருக்கலாம்' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...