கோவை: காரமடையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலன் தனிமையில் இருந்ததைப் பார்த்த அவரது கணவன் அதிர்ச்சி அடைந்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: காரமடையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலன் தனிமையில் இருந்ததைப் பார்த்த அவரது கணவன் அதிர்ச்சி அடைந்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அன்சூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 62). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி கவிதா (வயது 40). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த காளி (வயது 58) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கவிதாவும் காளியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அத்துடன் செல்போன் மூலமாகவும் பேசி வந்தனர். தகவலறிந்த தர்மன் கவிதாவைக் கண்டித்தார். இதற்கிடையே நேற்று இரவு தர்மன் வீட்டுக்கு மது வாங்குவதற்காக காளி வந்தார். அப்போது அங்கு தர்மன் இல்லாததால் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு கவிதாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென அங்கு வந்த தர்மன் இதைக்கண்டு ஆத்திரமடைந்தார். வீட்டின் உள்ளே இருந்த இரும்புக் கம்பியை எடுத்து காளி மற்றும் கவிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அன்சூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 62). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி கவிதா (வயது 40). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த காளி (வயது 58) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கவிதாவும் காளியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அத்துடன் செல்போன் மூலமாகவும் பேசி வந்தனர். தகவலறிந்த தர்மன் கவிதாவைக் கண்டித்தார். இதற்கிடையே நேற்று இரவு தர்மன் வீட்டுக்கு மது வாங்குவதற்காக காளி வந்தார். அப்போது அங்கு தர்மன் இல்லாததால் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு கவிதாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென அங்கு வந்த தர்மன் இதைக்கண்டு ஆத்திரமடைந்தார். வீட்டின் உள்ளே இருந்த இரும்புக் கம்பியை எடுத்து காளி மற்றும் கவிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.