செல்போனால் உயிரிழந்த 9-ம் வகுப்பு மாணவி: கோவையில் பரிதாபம்!

கோவை: 9-ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பு முடிந்தபிறகும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டித்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: 9-ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பு முடிந்தபிறகும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டித்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள குறிச்சி பாளையத்தை சேர்ந்த அன்புராஜ் மகள் பெல்சியா (வயது 14). இவர் சூலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். இதற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்திருந்தனர்.

ஆன்லைன் வகுப்புகள் முடிந்தபிறகும்கூட பெல்சியா தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த பெல்சியா நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் உடனடியாக போலீசார் விரைந்து சென்று பெல்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...