திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு பூஜைகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு பூஜைகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 தினங்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்தும் , மின்வாரிய வேலைவாய்ப்புகளை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது கேஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கிற்கான பூஜைகள் செய்யப்பட்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மின்வாரியப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 தினங்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்தும் , மின்வாரிய வேலைவாய்ப்புகளை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது கேஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கிற்கான பூஜைகள் செய்யப்பட்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மின்வாரியப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.