கோவை: கோவையில் நோயினால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் மற்றும் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
கோவை: கோவையில் நோயினால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் மற்றும் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராக்கப்பன் மகள் உஷா (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த உஷா, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல சரவணம்பட்டி அருகே உள்ள ஜனதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். மார்கழி பனிக் காலம் என்பதால் இவருக்கு மூச்சுவிடுவதில் கூடுதல் தொந்தரவு ஏற்பட்டது. மேலும், இவரைப் பராமரிக்க உடன் யாரும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராக்கப்பன் மகள் உஷா (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த உஷா, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல சரவணம்பட்டி அருகே உள்ள ஜனதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். மார்கழி பனிக் காலம் என்பதால் இவருக்கு மூச்சுவிடுவதில் கூடுதல் தொந்தரவு ஏற்பட்டது. மேலும், இவரைப் பராமரிக்க உடன் யாரும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.