கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சங்கர் நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (வயது 28), சம்பவத்தன்று செந்தில்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனலட்சுமி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பவானி ஆற்றுக்கு துணிகளைத் துவைப்பதற்காக சென்றிருந்தார். அங்கு தனலட்சுமி அருகிலிருந்த ஒரு செடியிலிருந்து கிழங்கைப் பிடுங்கிச் சாப்பிட்டதாக தெரிகிறது.
துணிகளை துவைத்து முடித்ததும் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வயிறுவலி எடுக்கவே வலி தாங்க முடியாத தனலட்சுமி தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறினார். உடனே வீடுதிரும்பிய செந்தில்குமார் மனைவி தனலட்சுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் தனலட்சுமி சாப்பிட்டது விஷ கிழங்கு என்று கூறியதுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சங்கர் நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (வயது 28), சம்பவத்தன்று செந்தில்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனலட்சுமி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பவானி ஆற்றுக்கு துணிகளைத் துவைப்பதற்காக சென்றிருந்தார். அங்கு தனலட்சுமி அருகிலிருந்த ஒரு செடியிலிருந்து கிழங்கைப் பிடுங்கிச் சாப்பிட்டதாக தெரிகிறது.
துணிகளை துவைத்து முடித்ததும் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வயிறுவலி எடுக்கவே வலி தாங்க முடியாத தனலட்சுமி தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறினார். உடனே வீடுதிரும்பிய செந்தில்குமார் மனைவி தனலட்சுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் தனலட்சுமி சாப்பிட்டது விஷ கிழங்கு என்று கூறியதுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.