விஷ கிழங்கு சாப்பிட்ட இளம்பெண் சாவு

கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையம் சங்கர் நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (வயது 28), சம்பவத்தன்று செந்தில்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனலட்சுமி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பவானி ஆற்றுக்கு துணிகளைத் துவைப்பதற்காக சென்றிருந்தார். அங்கு தனலட்சுமி அருகிலிருந்த ஒரு செடியிலிருந்து கிழங்கைப் பிடுங்கிச் சாப்பிட்டதாக தெரிகிறது.

துணிகளை துவைத்து முடித்ததும் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வயிறுவலி எடுக்கவே வலி தாங்க முடியாத தனலட்சுமி தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறினார். உடனே வீடுதிரும்பிய செந்தில்குமார் மனைவி தனலட்சுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் தனலட்சுமி சாப்பிட்டது விஷ கிழங்கு என்று கூறியதுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...